court

img

பிரதமர் வீட்டு வசதி திட்ட நிதி முறைகேடு - 13 அதிகாரிகள் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை

பிரதமர் வீட்டு வசதி திட்ட நிதி முறைகேட்டில் கிருஷ்ணகிரியை சேர்ந்த 13 அரசு அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்
 பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் கிருஷ்ணகிரிக்கு ஒதுக்கிய நிதியை கையாடல் செய்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி கங்காதரன் என்பவர் 2021-ல் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் பி.பி பாலாஜி அமர்வு இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த பிறகு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், உத்தரவு பிறப்பிக்க அவசியமில்லை எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.